Sunday 20 November 2011

கூடங்குளம்...கூடும்குளமா? கூடாகுளமா?

கூடங்குளம்...இந்தியா முழுக்கப் பிரபல்யமாகிவிட்டது...ஆனால், தீர்வுதான்..இன்னமும் இழுபறியில் போய்க்கொண்டிருக்கின்றது..

இந்த அணுமின் நிலையத்திற்கு..எதிர்ப்பலைகள் முன்னரே இருந்தாலும்...தற்சமயம் ஆதரவு அலைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன..

வைகோ...இராமதாஸ் தவிர பிரதான எதிர்க்கட்சிகள் தள்ளிநின்றே வேடிக்கைப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது.  பத்திரிக்கைகள் கூட முழுமனதோடு எதிர்ப்புகளைப் பதிவு செய்யவில்லை.

சராசரி மனிதர்களிடையே..'இவ்வளவு வருசம் தூங்கிவிட்டு..இப்போ முழிச்சு சண்டை போடுகிறார்களே என்ற எண்ணம்தான் மிகைப்பட்டு இருக்கின்றது.

கலாம் முதலானோர் விலாவாரியாக விளக்கம் சொல்லியும், போராட்டக்குழுவின் எண்ணம் மாறுவதாகத் தெரியவில்லை..

புதியதாய்க் கேள்விகளைக் கேட்டு, 'மேப்பு'ம் கேட்பது எதற்கு என்பது புதிராய் இருக்கின்றது!!!!

இதற்கிடையில், வைகோ 'இலங்கைக்கு கரண்ட்..அதற்கே கூடங்குளம்' என்று வேறு, ஷாக் கொடுக்கிறார்...

அங்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டியன செய்து, பயம் போக்கி நம்பிக்கையூட்ட தெளிவான முயற்சிகள் என்ன என்பது குறித்து போராட்டக்குழுவும், அரசும் வெளிப்படையான எண்ணத்தோடு அணுகினால் ஒழிய,  இப்போதைக்கு இது தீர்வாகாது..  ! அதுவரை, அரசியல் பண்ணுபவர்களுக்கும், ஆதாயம் தேடுவோர்க்குமே பலனாய் இருக்கும்...!

http://tamil.oneindia.in/news/2011/11/20/koodankulam-centre-team-ll-decide-next-collector-aid0175.html

1 comment:

Anonymous said...

wait & watch..

Post a Comment

எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...